செய்திகள் :

காதலர் நாளன்று புதிய தொழில் தொடங்கும் கங்கனா!

post image

நடிகை, இயக்குநர், அரசியல்வாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட கங்கனா ரணாவத், தொழிலதிபராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹிமாசல் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கடந்தாண்டு மக்களவை உறுப்பினரானார்.

இதனிடையே, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி தானே எழுதி இயக்கி நடித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத். உலகம் முழுவதும் எமர்ஜென்சி படம் வெளியான நிலையில், பல்வேறு இடங்களில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், ஹிமாசல் மாநிலத்தில் இமயமலை பகுதியில் ’தி மெளண்டைன் ஸ்டோரி’ என்ற உணவகத்தை பிப்ரவரி 14 ஆம் தேதி திறக்கவுள்ளதாக கங்கனா ரணாவத் அறிவித்துள்ளார்.

தனது சிறுவயது கனவு நிறைவேறவுள்ளதாகவும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

முதல் வாடிக்கையாளர் தீபிகா படுகோன்!

உணவகத்தின் முதல் வாடிக்கையாளராக தீபிகா படுகோனுக்கு கங்கனா அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, அடுத்த 10 ஆண்டுகளில் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு கங்கனா ரணாவத், நான் உலகத்தரம் வாய்ந்த உணவுப் பட்டியலை கொண்ட உணவகத்தை திறக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருப்பார்.

அப்போது குறிக்கிட்ட தீபிகா, நான்தான் முதல் வாடிக்கையாளர் என்று தெரிவித்திருப்பார்.

தற்போது அந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, முதல் வாடிக்கையாளர் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என தீபகாவை டேக் செய்துள்ளார் கங்கனா.

மேலும், தொழிலதிபராகும் கங்கனாவின் புதிய முயற்சிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்... மேலும் பார்க்க

40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? - காங்கிரஸ்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியர்க... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு விலங்கு: மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பிய நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வெளியுறவுத... மேலும் பார்க்க

கை, கால்களில் விலங்கிட்டனர்: அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்கள் தகவல்

புது தில்லி: அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்த போது, கை மற்றும் கால்களில் விலங்கு போட்டிருந்தனர் என்று இந்தியர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பலரும்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!

யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தில்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதி... மேலும் பார்க்க