செய்திகள் :

`காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..!’ - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்த காதலன்

post image

தூத்துக்குடி மாவட்டம்,  கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரின் மூத்த மகன் வசந்த்.  ஐடிஐ படித்து வந்த நிலையில், கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு கோயம்புத்தூரில்  உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். அப்போது வசந்த்துக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே வசந்த், காதலித்து வந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். 

உயிரிழந்த வசந்த்

தான் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது குறித்து வசந்துக்கு தெரியவரவே அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் கோயம்புத்தூரில்  இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். காதல் தோல்வியால் சோகத்தில் இருந்து வந்துள்ளர்.  இந்நிலையில்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து கழுகுமலை காவல் நிலையபோலீஸார்  வசந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வசந்த், தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதி வைத்த கடிதத்தை அவரது வீட்டில் இருந்து போலீஸார் கைப்பற்றினர். அதில், "காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பா, அம்மாவை தனது சகோதரர் காப்பாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கழுகுமலை காவல் நிலையம்

இதுகுறித்து கழுகுமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொள்ளும் முன் அவர் தனது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில், தனது புகைப்படத்தை பதிவிட்டு அதில், "ரெஸ்ட் இன் பீஸ்.. இது எனக்கு நானே வச்சது.. நாளை எல்லோரும் வையுங்க" என்று குறிப்பிட்டிருந்தார். இதனை யாரும் எதிர்பார்க்காத நிலையில், திட்டமிட்டபடி வசந்த் தற்கொலை செய்திருப்பது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தடுப்பு மையம்

மோசடி வழக்கு: ``10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்" -நடிகர் சோனு சூட்க்கு எதிராக கைது வாரண்ட்!

பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா. இவர் லுதியானா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``மோஹித் சுலா என்பர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி... மேலும் பார்க்க

``வயித்துல குழந்தை இருக்கு, விட்டுடு தம்பினு கெஞ்சினேன்’’ - நெஞ்சை உறைய செய்த கர்ப்பிணி வாக்குமூலம்

வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறத... மேலும் பார்க்க

``தையல் போட்டால் தழும்பு வரும்'' -காயத்தில் Fevi kwik போட்டு ஒட்டிய செவிலியர்... கர்நாடக அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆரம்ப சுகாதார மையம். இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி கன்னத்தில் ஆழமான காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட குருகிஷன் அன்னப்ப ஹோசாமணி என்ற 7 வயது சி... மேலும் பார்க்க

மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள தனியார்ப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்தகுமார்.நேற்று (பிப்ரவரி 6) பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது நான்காம் வகுப்பு படித்து வரு... மேலும் பார்க்க

பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை இளைஞர்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் விமல்குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் விமல்குமாரின் நடவடிக... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறல்; கீழே தள்ளிவிட்ட நிர்வாண இளைஞன் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள மங்கள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகிலுள்ள கந்தம்பாளையம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.தனது கணவருடன் வ... மேலும் பார்க்க