செய்திகள் :

`காதல் என்ன சாதியைப் பார்த்து வருவதா?' - இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்!

post image

சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "இன்ஸ்டாவில் வரக் கூடிய தராதரம் இல்லாத ஆட்களை நாம் வளர்த்து விடுகிறோம். வளர்ந்த பிறகு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைத்துக்கொள்கிறார்கள். அது அப்படி இல்லை. இதற்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்க வேண்டும்.

ஷகிலா

சாதியைப் பற்றி யாருமே பேசக் கூடாது. அவர் (திவாகர்) பேசியது பர்சனலாக என்னைப் பாதித்தது. ஜி.பி.முத்து குறித்தும் பேசியிருக்கிறார். யாரும் யாரையும் பற்றி இப்படிப் பேசக் கூடாது. புகார் அளித்தால்தான் இப்படி செய்வது நிற்கும். காவல்துறையில் நிச்சயம் நடாவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

கவின் ஆணவப் படுகொலை குறித்து பேசியிருந்தது எனக்கு கஷ்டமாக இருந்தது. அவரவர் சாதியில் லவ் பண்ணியிருந்தால் இந்த பிரச்னையே இல்லை எனப் பேசியிருக்கிறார். லவ் என்ன சாதியைப் பார்த்து வருவதா? அவரிடம் இதைப் பற்றியெல்லாம் கேட்டிருக்கவே கூடாது." என்றார்.

ராணிப்பேட்டை: காவல் நிலையம் அருகில் இளைஞர் படுகொலை - திமுக கவுன்சிலர் கைது; இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கவுன்சிலரின் கணவன் சுதாகர்ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள அம்மனூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் அஸ்வினி (வயது 36). இவரின் கணவன் சுதாகர் (வயது 45) ஃபைனான்ஸ் விட்டு வட்டி வச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்த நாட்டு வெடி; 2 மாணவர்கள் காயம்; என்ன நடந்தது?

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் திருச்செந்தூர... மேலும் பார்க்க

குளச்சல்: சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய உறவினர்; குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சின்னக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேசலிங்கம்(42). இவர் கடந்த 6 மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: `அரை நிர்வாண நடனத்துடன் ஹெராயினும் புழங்குகிறது’ - சாடும் திமுக

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியரால் தமிழகத்தைச் சேர்நத கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளிய... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: 'கல்லூரி மாணவரைக் கொலை செய்தது ஏன்?’ - ஊழியர்கள் வாக்குமூலம்

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: "பவுன்சர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்தது ஏன்?" - கோ.சுகுமாறன்

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு புதுச்சேரிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கடந்த 9-ம் தேதி ரெஸ்டோ பார் ஊழியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்க... மேலும் பார்க்க