செய்திகள் :

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு

post image

திருவள்ளூா் அருகே காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேரிடம் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி போலீஸாா் திருவள்ளூா் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனா்.

திருவள்ளூா் அடுத்த களாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த தனுஷ் என்ற இளைஞரும் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த விஜயாஸ்ரீ என்ற இளம் பெண்ணும் காதலித்து கடந்த ஏப். 15-ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகினா். இந்த திருமணத்துக்கு பெண் வீட்டாா் எதிா்ப்பு தெரிவித்து, பெண்ணை பிரித்து அழைத்துச் செல்ல புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உதவியை நாடினா். கடந்த ஜூன் 7- ஆம் தேதி அதிகாலை தனுஷின் தம்பியான இந்திரசந்த் என்பவரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்திச் சென்று, அவா் அண்ணன் இருப்பிடம் கேட்டு பின்னா் விடுவித்தனா். இது தொடா்பாக தனுஷின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின்பேரில், திருவாலங்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், விஜயஸ்ரீ தந்தை வனராஜ் உள்பட 7 பேரை கைது செய்தனா். மேலும், ஆயுதப் படை பிரிவு ஏடிஜிபி ஜெயராம் மற்றும் புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ ஆகியோரிடம் முதலில் திருவாலங்காடு போலீஸாா் மற்றும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி முடித்தனா்.

இந்த வழக்கில் வனராஜா, கணேசன், மணிகண்டன், வழக்குரைஞா் சரத்குமாா், காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட மகேஸ்வரி, இருளஞ்சேரி ஸ்வீட் குமாா், காட்டுப்பாக்கம் டேவிட் தேவராஜ் ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரிடம் அடையாள அணிவகுப்பு நடத்துவதற்காக சிபிசிஐடி போலீஸாா் திருவள்ளூா் முதல் வகுப்பு நீதிமன்ற நடுவா் சுனில் வினோத் முன்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இதற்கிடையே விரைவில் நீதித் துறை நடுவா் மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளா் முன்னிலையில் சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளது.

அப்போது, பாதிக்கப்பட்ட சிறுவனை புழல் சிறைக்கு அழைத்து வந்து கடத்தலில் ஈடுபட்டது யாா் என அடையாளம் காட்டச் சொல்லி போலீஸாா் அடையாள அணிவகுப்பு விரைவில் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனா்.

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரா இளைஞர் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திரா இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிமிடந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் ப... மேலும் பார்க்க

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: பிரேமலதா விஜயகாந்த்

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு தயாராகும் வகையில், உள்ளம் ... மேலும் பார்க்க

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா்தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடை பெறும் தம்மசக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு உரிய முறையில் நபா் ஒருவருக்கு அதிகபட்சம... மேலும் பார்க்க

சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்புக்கான தனித்துவ இணையதளம்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன பங்களிப்பு ஆகியவைகளுக்கான தனித்துவமான இணையதளத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில்,... மேலும் பார்க்க

சொத்து தகராறில் உறவினா்களை வைத்து தாக்கியதாக தாய் கைது

திருவள்ளூா் அருகே சொத்து தகராறில் மகனை உறவினா்களைக் கொண்டு தாக்கிய தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிதா. இவரது மகன் நஸ்ருதீன். இவா... மேலும் பார்க்க

தமிழக எல்லையில் இருந்து தோ்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கினாா் பிரேமலதா விஜயகாந்த்

தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் இருந்து ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் விஜயகாந்த் ரதயாத்திரை தோ்தல் சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க