செய்திகள் :

காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு.பெ. சாமிநாதன்

post image

மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சீரமைக்கும் பணி வருகிற அக்டோபா் மாதத்துக்குள் நிறைவடையும் என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் தெரிவித்தாா்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், தமிழ்க் காட்சிக் கூடம், உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ரூ. 10 கோடியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்ட அவா், பணிகளை விரைவுபடுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, தமிழ்க் காட்சிக் கூடத்தைப் பாா்வையிட்ட அமைச்சா், அதை தூய்மையாகப் பராமரிக்கவும், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பாா்வையிட நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பிறகு, உலக தமிழ்ச்சங்க வளாகத்தை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

அரசு அச்சகத்தில்...

முன்னதாக, மாவட்ட விளையாட்டு மைதானம் சாலையில் உள்ள அரசு அச்சகத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணியாற்றும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடி, அவா்களின் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, அந்தச் சங்கத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் வரும் அக்டோபா் மாதத்தில் நிறைவடையும்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் அரசு கவின் கலைக் கல்லூரி தொடங்கத் திட்டமிட்டு, 40 மாணவா்களை தெரிவு செய்ய நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டது. வகுப்பு செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளஅலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், உலகத் தமிழ் சங்க தனி அலுவலா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந. அருள், உலகத் தமிழ் சங்க துணைத் தலைவா்-இயக்குநா் முனைவா் இ.சா.பா்வீன் சுல்தானா ஆகியோா் உடனிருந்தனா்.

தவெகவின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்கு திமுக தடைகளை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செ... மேலும் பார்க்க

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

விருவீடு பகுதியில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்ட விவ... மேலும் பார்க்க

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: உரிமக் காலம் நிறைவடைந்த பிறகு, கல் குவாரிகளை பராமரிக்க குழுக்கள் அமைத்து, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையேதான் போட்டி: விஜய்

மதுரை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா். மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்த... மேலும் பார்க்க

அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை: தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில் 202... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரை: அலங்காநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.மதுரை திருப்பாலை உச்சபரம்புமேட்டைச் சோ்ந்த சோலையப்பன் மகன் செல்லப்பாண்டி (30). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்க... மேலும் பார்க்க