Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
கானாடுகாத்தான் பகுதியில் செப். 16-இல் மின் தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப். 16) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் ஸ்ரீ ராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.