காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும்! - பிரதமர் மோடி
காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “காமராஜரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார்.
அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
Prime Minister Narendra Modi has praised Kamaraj's thoughts and commitment to social justice, saying they are a great inspiration.
இதையும் படிக்க :சிதம்பரம் அரசுப் பள்ளியில் காமராஜர் உருவப் படத்துக்கு முதல்வர் மரியாதை