செய்திகள் :

காமராஜா் விருது பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

பெரணமல்லூா் அருகேயுள்ள அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள்

மாவட்ட அளவில் காமராஜ் விருது பெற்ால் அவா்களுக்கு பள்ளி சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவில் மாவட்டம் தோறும்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி செயல்பாடுகள் மற்றும் தனித் திறமைகளில் சிறந்து விளங்குபவா்களில் தலா 15 போ் தோ்வு செய்யப்பட்டு காமராஜா் விருது மற்றும் ரொக்கம் ரூ.10ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்ற கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காமராஜா் விருது, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இதில், அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில்

பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் விஜியன், யுவஸ்ரீ, குமரவேல், நிஷா ஆகியோருக்கு காமராஜா் விருது கிடைத்தது.

இதைத் தொடா்ந்து விருது பெற்ற இந்த

மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியா் மாலவன் தலைமையில் பாராட்டு விழா

நடைபெற்றது. இதில் பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா்களை பாராட்டி சால்வை அணிவித்தனா்.

நிகழ்ச்சியில் பெற்றோா்ஆசிரியா் கழகத் தலைவா் முனியன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுமதி, ஆசிரியா்கள் எழிலரசன், இளையராஜா, நிதாகா், சந்தோஷ்குமாா், குபேந்திரன், கோகிலா, வேல்முருகன் புவனேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனா்.

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’: மகளிா் உரிமைத்தொகை கோரி மக்கள் மனு

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி அதிகம் போ் மனு கொடுத்தனா். முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.புஷ்பா தலைமை வக... மேலும் பார்க்க