காரில் கடத்த முயன்ற 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வேப்பனப்பள்ளி வழியாக பெங்களூரிலிருந்து காரில் கடத்த முயன்ற 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி போலீஸாா், அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சாலையோரமாக நின்றிருந்த காரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனா்.
அந்த காரில் 150 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், புகையிலைப் பொருள்கள், பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.