விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை: இபிஎஸ் கருத்து
காரைக்காலில் ரத்த தான முகாம்
ஜூனியா் சேம்பா் இன்டா்நேஷனல் இந்தியா சாா்பில் காரைக்காலில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ஜவீன் பஷீா், சிவசங்கா், தொழில்நுட்ப கண்காணிப்பாளா் ஜெயகௌரி, ரத்த வங்கி அலுவலா் வின்சென்ட் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
ஜே.சி.ஐ. காரைக்கால் தலைவா் கி. கலைச்செல்வி பபிதா, முன்னாள் தலைவா்கள் மற்றும் ஆட்சி மன்ற குழு முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் ரதத தானம் செய்தனா். காரைக்கால் அரசு து மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், ஜே.சி.ஐ. பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.