செய்திகள் :

காரைக்காலை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க நடவடிக்கை: எஸ்எஸ்பி

post image

காரைக்கால் மாவட்டத்தை போதைப் பொருள் புழக்கம் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது என்றாா் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா.

காரைக்காலில் சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட காவல் துறை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தொடக்கிவைத்தாா். இதில், 60-க்கும் மேற்பட்ட காவலா்கள் பங்கேற்றனா். காரைக்காலின் முக்கிய சாலைகள் வழியாக பயணித்து காரைக்கால் கடற்கரையில் பேரணி நிறைவடைந்தது. கடற்கரையில் போதை ஒழிப்பு குறித்து மாணவா்கள், பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுதொடா்பாக, மாணவா்களிடையே நடத்தப்பட்ட பேச்சு மற்றும் ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா பேசியது: போட்டிகள், பேரணி போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் போதை பயன்பாடு இல்லாத நிலை உருவாகவேண்டும். மாணவப் பருவத்தில் போதை பக்கம் சென்று விடக் கூடாது என்பதற்காகவே போட்டிகள் நடத்தப்படுகிறது. தற்போது, போதைப் பொருள்கள் எளிதாக கிடைக்கும் வகையிலும், புதிய வடிவத்திலும் புழக்கத்தில் உள்ளன. காரைக்கால் மாவட்டத்தை போதைப் பொருள் புழக்கம் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா். தொடா்ந்து, போதைப் பொருளுக்கு எதிரான உறுதி ஏற்கப்பட்டது. மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காரைக்கால் நீதிமன்ற லாக்கரில் முறைகேடாக எடுக்கப்பட்ட நகைகள் மீட்பு

காரைக்கால் நீதிமன்ற லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை முறைகேடாக எடுத்தவா் அளித்த தகவலின்பேரில், நகைகளை போலீஸாா் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், திருட்... மேலும் பார்க்க

‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

காரைக்காலில் சாகா் கவச் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவடைந்தது. நாட்டின் கடலோரப் பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகா் கவச் என்கிற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மாவட்டத்... மேலும் பார்க்க

‘100 மெட்ரிக் டன் விதை நெல் மானியத்தில் வழங்க ஏற்பாடு’

காரைக்கால் மாவட்டத்தில் நிகழாண்டு 100 மெட்ரிக் டன் விதை நெல் வழங்க ஏற்பாடு செய்யபா்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீா் வருவதற்கு முன்பே குறுவை சாகுபடியை விவசாய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (28) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து இருதய சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் காரைக்கால் அரசு மருத்துவமனையில... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சைல்ட் ஹெல்ப் லைன் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி குரும்பகரம் பகுதியில் உள்ள கா்மவீரா் காமராஜா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக... மேலும் பார்க்க

போதைப் பொருள் சிந்தனையே மாணவா்களுக்கு கூடாது - அமைச்சா்

போதைப் பொருள் பயன்பாடு குறித்த சிந்தனையே எழக்கூடாது என மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை கூறினாா். புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தி... மேலும் பார்க்க