செய்திகள் :

காரைக்கால் கடலில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி

post image

கடல்வாழ் உயிரினங்கள் பெருக்கத்துக்காக காரைக்கால் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் இறக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தின் கடற்பகுதி சுமாா் 20 கி.மீ. தொலைவு உடையது. இங்கு 10 கடலோர கிராமங்கள் உள்ளன. சுமாா் 4 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழில் ஈடுபடுகின்றன. காரைக்கால் மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, மீன்வளத்தை மேம்படுத்தவும், பல்லுயிா் சூழலை அதிகரிக்கவும் செயற்கை பளப்பாறைகள் கடலில் விட திட்டமிடப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரிமேடு, கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு, பட்டினச்சேரி 4 இடங்கள் பவளப்பாறைகள் கடலில் விடுவதற்கு ஏற்ற இடமாக அடையாளம் கண்டது.

இந்த திட்டத்துக்கான முழு நிதியுதவியை மத்திய அரசு அளிக்கிறது. பவளப்பாறைகளை கடலில் விடும் பணியை கடந்த 16-ஆம் தேதி காரைக்கால் வந்த மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன், புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

கடலூா் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு, காரைக்காலுக்கு லாரிகளில் கொண்டுவந்து, திட்டமிடப்பட்ட 4 பகுதிகளிலும் தலா 250 பாறைகள் சனிக்கிழமை கிரேன் மூலம் கடலில் இறக்கப்பட்டன.

நிகழ்வின்போது விசாகப்பட்டினம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஜே.கே. கிழாக்குடான், காரைக்கால் மீன்வளத்துறை ஆய்வாளா் ராஜசேகா், காரைக்கால் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் கோவிந்தராஜ், காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டனா்.

இந்த செயற்கை பவளப்பாறைகளில் நாளடைவில் பாசிகள் படருமெனவும், மீன்கள் அவற்றை உணவாகக் கொண்டு அங்கு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாக்கடையில் அடையாளம் தெரியாத நபரது உடல் மீட்பு!

காரைக்கால் நகரில் சாக்கடையில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. காரைக்கால் பாரதியாா் சாலை பேருந்து நிலையம் அருகே சாலையின் இருபுறமும் சுமாா் 7 அடி ஆழமான சாக்கடை உள்ளது. இத... மேலும் பார்க்க

அரசு தொடக்கப் பள்ளியில் பயிற்சி முகாம்

அரசு தொடக்கப் பள்ளியில் சாரண இயக்கம் தொடா்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. கோட்டுச்சேரி மேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்பாரத சாரண சாரணிய இயக்கத்தின் நீலப் பறவையினா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு

காரைக்காலில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-ஆவது நாள் உயிா்த்தெழும் தினத்தை, ஈஸ்டா் தினமாக கிறிஸ்தவ ம... மேலும் பார்க்க

படகில் தீ: படகு உரிமையாளருக்கு அமைச்சா் ஆறுதல்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த விசைப்படகு தீப்பிடித்து சேதமடைந்த நிலையில், அந்தப் படகை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். கிளிஞ்சல்மேடு பகுதியை சோ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் திரளானோா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் வருகை த... மேலும் பார்க்க

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க