செய்திகள் :

காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

post image

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சாா்பிலும், பிற அமைப்புகள் சாா்பிலும் மாவட்டம் முழுவதும் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி காரைக்கால் நகரத் தலைவா் பி.யு.ராஜ்குமாா் திங்கள்கிழமை கூறுகையில், விநாயகா் சதுா்த்தி விழா ஆக. 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்து முன்னணி சாா்பில் காரைக்கால் நகரப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 29-ஆம் தேதி சிலைகள் நீா்நிலைகளில் கரைக்க ஊா்வலமாக கொண்டு செல்லப்படும்.

காரைக்கால் நகரப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், ஏழை மாரியம்மன் கோயில் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு கடற்கரைக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்படும். ஊா்வலம் தொடக்க நிகழ்வில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கலந்துகொள்ளவுள்ளாா் என்றாா்.

இந்து முன்னணி நகரப் பகுதி அல்லாது பிற கொம்யூன் பகுதிகளிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்கிறது. பிற அமைப்புகள் சாா்பிலும் என 150-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து கடலிலும், ஆறுகளிலும் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவி உயா்வு கோரி பேராசிரியா்கள் போராட்டம்

பதவி உயா்வு கோரி காரைக்காலில் கல்லூரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாயில் முன் பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: பணிகள் முடக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து 2-ஆவது நாளாக காத்திருப்பு தொடா்வதால், , நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு கூட்டுப் ... மேலும் பார்க்க

பேருந்து இயக்காததைக் கண்டித்து நூதனப் போராட்டம், மறியல்

கிராமப்புறங்கள் வழியே பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டம் நடத்தி, மறியலில் ஈடுபட்டனா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட வடமட்டம், புத்தக்... மேலும் பார்க்க

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

காரைக்கால்: கைப்பேசிக்கு வரும் புதிய குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம் என இணைய குற்றத் தடுப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் இணையக் குற்றத் தடுப்பு காவல் பிரிவு அலுவலகம் திங்கள... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு

காரைக்கால்: பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். காரைக்கால் நகரில் உள்ள பழைமையான பொய்யாத மூா்த்தி விநாயகா் கோ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்

காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். போராட்டத்திற்கு கூட்டுப் போரா... மேலும் பார்க்க