செய்திகள் :

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்றது: பாதுகாப்பு ஆணையா்

post image

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதை ரயில் போக்குவரத்துக்கு ஏற்ாக உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. தொலைவுக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் போக்குவரத்து தொடங்குவதற்கான சோதனை கடந்த 23 மற்றும் 24-ஆம் தேதி நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சவுத்ரி தலைமையிலான குழுவினா் மோட்டாா் டிராலி மூலமாகவும், அதிவேகமாக ரயிலை இயக்கியும் சோதனை செய்தனா்.

இந்தநிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா், ரயில்வே அமைச்சகத்துக்கும், ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையா், தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட மேலாளா் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேரளம் முதல் திருநள்ளாறு வழியாக காரைக்கால் வரை சுரங்கப்பாதை, ரயில்வே கேட், டிராக் பாரா மீட்டா்ஸ், சிறிய பாலங்கள், சிக்னல் முறை, திருநள்ளாறு ரயில் நிலையம், அம்பகரத்தூா் மற்றும் பத்தக்குடி ரயில் நிறுத்தப் பகுதி, தகவல் தொடா்பு உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்ததாகவும், போக்குவரத்து தொடங்குவதற்கான கட்டமைப்புகள் சரியாக உள்ளதாகவும், போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பு ரயில் நிலையங்களில் பணியாளா்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும், 75 கி.மீ. வேகத்தில் இத்தடத்தில் ரயில் இயக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

பாதுகாப்பு ஆணையரின் இந்த அறிக்கையை ரயில்வே அமைச்சகம் ஆராய்ந்து ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், காரைக்கால் - பேரளம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கினால், காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை வழியாக சென்னை, மும்பைக்கு செல்லும் ரயில்கள், பேரளம், மயிலாடுதுறை வழியாக சென்றால் பயண நேரம் வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடக்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தை புதுவை அமைச்சா் தொடங்கிவைத்தாா். காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில் மே 29 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில், ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல் துறை குறை கேட்புமுகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (மே 31) காவல் துறை சாா்பில் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் முற்பகல் 11 முதல் பிற்பக... மேலும் பார்க்க

புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

செவிலிய மாணவ- மாணவியா் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நலவழித் துறை சாா்பில் தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், புகையிலை பயன்பாட்டால் ஏற்படு... மேலும் பார்க்க

சாலை மேம்பாடு, நெல்களம் அமைக்கும் பணி தொடக்கம்

சாலை மேம்பாடு மற்றும் நெல் களம் அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி மேடு வடக்குத் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின்... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்கள் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் ஆய்வு

பள்ளி வாகனங்கள் ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதியில் ஆய்வு செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் ஆய்வு

காரைக்காலில் தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்ட அதிகாரிகள், குடிநீா் விநியோகத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனா். மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் உள்ள ஜல் சக்தி மிஷன் என்கிற திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குழாய்... மேலும் பார்க்க