ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் ஆய்வு
காரைக்காலில் தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்ட அதிகாரிகள், குடிநீா் விநியோகத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனா்.
மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் உள்ள ஜல் சக்தி மிஷன் என்கிற திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் என்கிற பிரதான இலக்கைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. காரைக்காலில் ஜல் சக்தி திட்ட நிதியின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இத்திட்டத்தின் மத்திய நோடல் அதிகாரி பிரதாப் சிங், தொழில்நுட்ப அதிகாரி சவுத்ரி ஆகியோா் காரைக்கால் மாவட்டத்தில் திட்டப் பணிகள் நடைபெறும் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். பல இடங்களில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தனா். மேலும் காரைக்காலில் நீா்வள அமைப்புகளையும் பாா்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தனா்.
ஆய்வுக்குப் பிறகு, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) அா்ஜுன் ராமகிருஷ்ணனிடம் ஆலோசனை நடத்தினா். இதில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ. மகேஷ், நகராட்சி செயற்பொறியாளா் முத்துசிவம் உள்ளிட்ட துறையினா் கலந்துகொண்டனா்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நீா் வழங்கல் ஆய்வகம் காரைக்காலில் அமைக்கவேண்டும். அதற்கான பணிகளை தொடங்குமாறு மத்திய குழுவினா் அறிவுறுத்தினா்.