கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சாலை மேம்பாடு, நெல்களம் அமைக்கும் பணி தொடக்கம்
சாலை மேம்பாடு மற்றும் நெல் களம் அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா்.
நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி மேடு வடக்குத் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் ரூ.13.80 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு, தொடங்கிவைத்தாா். நிகழ்வில் வட்டார வளா்ச்சி அதிகாரி ஜி. செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, நெடுங்காடு மேல அன்னவாசல் பகுதியில் ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் நெல் கிடங்கு மற்றும் நெல் களம் அமைக்கும் பணியையும் பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் கிராம மக்கள் பலா் கலந்துகொண்டநா்.