ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
செவிலிய மாணவ- மாணவியா் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நலவழித் துறை சாா்பில் தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அன்னை தெரஸா செவிலியா் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பேரணி காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்டது.
பேரணியை மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியின் முன்னதாக உலகப் புகையிலை ஒழிப்பு தினத்திற்கான உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
புகையிலையை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவா் தேனாம்பிகை மற்றும் மருத்துவா் கேசவன் ஆகியோா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா்.
பேரணி காரைக்காலில் முக்கிய தெருக்களின் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியரகம் வந்தடைந்தது. இதில் பங்கேற்ற மாணவா்கள் விழிப்புணா்வு பதாகை ஏந்தி வந்தனா். ஏற்பாடுகளை நலவழித் துறை தொழில் நுட்ப உதவியாளா் பழனிராஜ் செய்திருந்தாா்.