ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
பள்ளி வாகனங்கள் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் ஆய்வு
பள்ளி வாகனங்கள் ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதியில் ஆய்வு செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவ-மாணவியா் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மோட்டாா் வாகனச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை அமல்படுத்தும் நோக்கிலும், காரைக்கால் பகுதிக்குட்பட்ட கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதி போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்டத்தின் கல்வி நிறுவனங்களைச் சாா்ந்த சுமாா் 175 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளன. வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் உதவி வாகன ஆய்வாளா் ஆகியோா் சிறப்பு ஆய்வு செய்து, தகுதியுள்ள வாகனங்களுக்கு சான்றிதழ் அளித்து வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும். இந்த வாகனங்கள் மட்டுமே மாணவா்களை பயணிக்க சாலையில் அனுமதிக்கப்படும். மீறினால் வாகனம் பறிமுதல் செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.