செய்திகள் :

காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்

post image

இலங்கை கடற்படை மற்றும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

காரைக்கால் மீனவர்கள் எல்லைத் தாண்டியதாக இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.

இவர்களை இந்தியா கொண்டுவரவும், கைது செய்யப்பட்டோரை விடுவிக்க வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையில் திருப்தியில்லையெனக் கூறியும் காரைக்கால் மீனவர்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 15-ஆம் தேதி படகுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். 16-ஆம் தேதி இருசக்கர வாகனங்களில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சுமார் ஆயிரம் பேர் திரண்டு ரயில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்றம்! தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 5,832 கோடி அபராதம்!

காரைக்கால் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் புறப்படவிருந்த ரயிலை மறிக்கும் வகையில் தண்டவாளத்தில் பெண்கள் பலரும் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலைய தண்டவாளத்தில் நீண்டதூரம் மீனவர்கள் கொடியேந்தி கண்டன முழக்கங்களிட்டனர்.

ரயில்வே போலீஸார் மற்றும் காரைக்கால் காவல்நிலைய போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி அப்புறப்படுத்தினர். இதன் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

குண்டு காயமடைந்த மீனவர்களை உடனடியாக இந்தியா கொண்டுவரவேண்டும், படகுகளையும், கைது செய்யப்பட்டோரையும் விடுவிக்காத வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். பல ஆண்டு... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!

கார் பந்தயத்தில் நேரிட்ட விபத்தில் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் ரேஸிங்கில் நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க