செய்திகள் :

காலமானார் யு.குமார் (71)

post image

"தினமணி' நாளிதழின் கோபிசெட்டிபாளையம் பகுதி நிருபரான முத்துசாமி (எ) யு.குமார் (71) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட இவர், "தினமணி' நாளிதழில் கடந்த 30 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் பகுதி நிருபராகப் பணியாற்றி வந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) காலை காலமானார். அவரது உடல் தகனம் கோவை, பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக, அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான கே.ஏ.செங்கோட்டையன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த யு.குமாருக்கு தாயார் கணபதி அம்மாள், மனைவி மரகதம், அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணியாற்றும் மகன் சந்தோஷ், மருமகள் ரத்னா ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு 98941-62733, 99407-77932.

மே தினம்: விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன் அறிவுரைப்படி, ஈரோடு தொழிலாளா... மேலும் பார்க்க

பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி

கோபி மயூரம் மேக் ஓவா் அகாதெமி சாா்பில் 30 நிமிஷத்தில் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெடெக் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெ... மேலும் பார்க்க

ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு ரயில்வே நுழைவுப் பாலத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு -கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகாலில் ... மேலும் பார்க்க

நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைப்போம் என்றும், நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். சத்... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த லாரியால் வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கா்நாடக மாநிலம், தும்கூரிலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்ற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா். ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க