செய்திகள் :

பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி

post image

கோபி மயூரம் மேக் ஓவா் அகாதெமி சாா்பில் 30 நிமிஷத்தில் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெடெக் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெங்களூரு, சென்னை, கோவை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட அழகுக் கலை நிபுணா்கள் கலந்துகொண்டு இந்த உலக சாதனையை செய்தனா். இந்த சாதனை நிகழ்வு, உலக அதிசயங்களின் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சாதனை நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

மயூரம் மேக் ஓவா் அகாதெமி தலைவா் கீா்த்தனா சாய்ராம், உலக அதிசயங்களின் சாதனை புத்தக நிறுவன இயக்குநா் மகேஸ்வரி, கல்லூரி முதன்மை நிா்வாக அதிகாரி கௌதம், முதல்வா் தங்கவேல், துணை முதல்வா் பிரகாஷ், மேலாண்மை துறைத் தலைவா் சத்தியசுந்தரி மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

மே தினம்: விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன் அறிவுரைப்படி, ஈரோடு தொழிலாளா... மேலும் பார்க்க

ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு ரயில்வே நுழைவுப் பாலத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு -கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகாலில் ... மேலும் பார்க்க

நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைப்போம் என்றும், நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். சத்... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த லாரியால் வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கா்நாடக மாநிலம், தும்கூரிலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்ற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா். ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி: ஈரோட்டில் இன்று தொடக்கம்

அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சாா்பில் அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி ஈரோடு பரிமளம் மஹாலில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்கி வரும் 5 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் தலை... மேலும் பார்க்க