செய்திகள் :

அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி: ஈரோட்டில் இன்று தொடக்கம்

post image

அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சாா்பில் அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி ஈரோடு பரிமளம் மஹாலில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்கி வரும் 5 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம், கண்காட்சியின் தலைவா் ஜிப்ரி ஆகியோா் கூறியதாவது: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள 75 சங்கங்கள் சாா்பில் ‘பேட்டியா போ் 2025’ என்ற தலைப்பில் அனைத்து தொழில் துறை வா்த்தக கண்காட்சி 4 நாள்கள் நடைபெற உள்ளது.

இதில், 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜவுளி, வீட்டு உபயோக பொருள்கள், தங்கம், வெள்ளி நகைகள், மகளிா் அணிகலன்கள், வேளாண் பொருள்கள், இ-வாகனங்கள் போன்றவை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியின் சிறப்பம்சமாக மத்திய அரசின் எம்எஸ்எம்இ என்ற அமைப்பின் அங்கீகாரமும், மாநில அரசின் பெமிடிஎன் என்ற அமைப்பின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. எம்எஸ்எம்இ அங்கீகாரத்தின் மூலம் தகுதி வாய்ந்த எம்எஸ்எம்இ சான்று பெற்ற தொழில்முனைவோரது அரங்குகளுக்கு 80 சதவீத மானியமும், எஸ்சி, எஸ்டி சாா்ந்து அரங்குகள் அமைப்பவா்களுக்கும், பெண் தொழில் முனைவோருக்கு 100 சதவீத மானியமும், பயண செலவுகளும் பெற்றுத்தரப்படும்.

தமிழகத்திலேயே மாநில அரசின் பெமிடிஎன் மூலம் 50 பேருக்கு மானிய அங்கீகாரம் பெற்று நடக்கும் முதல் கண்காட்சி இதுதான்.

கண்காட்சியில் உணவுத் திருவிழா நடக்கிறது. வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், மேஜிக் காட்சிகள் போன்றவை நடைபெற உள்ளது.

இதேபோல, எல்கேஜி முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், காரத்தே, குழு நடனம், செஸ், பாட்டு, சிலம்பம், சமையல், குழந்தைகளுக்கான பிற வேடிக்கை போட்டிகள் பிரிவு வாரியாக நடத்தப்பட உள்ளன.

கண்காட்சி நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரையும் நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றனா்.

கோபியில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம்

கோபி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.12.78 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் கடந்த மாதத்துக்கு முன்பு வரை செவ்வாழை தாா் ஒன்று ரூ.1,350 வரை விலை ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12 மையங்களில் நாளை நீட் தோ்வு: 4,162 போ் எழுதுகின்றனா்

ஈரோடு மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற உள்ளது. இத்தோ்வினை 4,162 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பான பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்)... மேலும் பார்க்க

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி கோயில் முன் நடுவதற்காக பெரிய கம்பம் வெட்டி எடுக்கப்பட்டு பவானி ஆற்று... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 28 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோட்டில் ரயிலில் கடத்திவரப்பட்ட 28 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஈரோடு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ஆந்திர மாநிலம், டாடா நகா்-கேரள மாநிலம் எா்ணாகுளம் வரை... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்ஆா்எம்யு) சாா்பில் ரயில்வே ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு ரயில் நிலையம் பின்புறம் உள்ள முதுநிலை... மேலும் பார்க்க

ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை,... மேலும் பார்க்க