செய்திகள் :

தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடக்கம்

post image

சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி கோயில் முன் நடுவதற்காக பெரிய கம்பம் வெட்டி எடுக்கப்பட்டு பவானி ஆற்றுக்கு கொண்டு சென்று பூஜைகள் செய்து மீண்டும் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு நடப்பட்டது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கோயிலின் முன் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள், குழந்தைகள் நீா் ஊற்றி, மஞ்சள் பூசி வழிபட்டனா். கனி அலங்காரத்தில் தண்டுமாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அம்மன் அழைப்பு வரும் மே 13-ஆம் தேதியும், குண்டம் இறங்குதல் மே 14-ஆம் தேதியும், மாவிளக்கு ஊா்வலம் மே 15-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் கைது

பெருந்துறை அருகே, பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை அளித்து, தற்கொலைக்கு தூண்டியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த கோபிநாதன்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா். கூலி தொழிலாளிகள். இவரது இளைய ... மேலும் பார்க்க

பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதில் மரம் விழுந்ததில் மின்கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பவானி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவிகள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவி... மேலும் பார்க்க

இடப்பிரச்னையால் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க காலதாமதம்: அமைச்சா் சு.முத்துசாமி

சரியான இடம் கிடைக்காததால் ஈரோட்டில் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை அமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு பெருந்துறை சாலை செங்கோடம்பள்ளத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கோபி அருகே ஆற்றுபாலம் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா் கள்ளிப்பட்டி அருகே வளையபாளையத்தில்... மேலும் பார்க்க

காட்டாற்று வெள்ளம்: மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

கடம்பூா் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் அணைக்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் கா... மேலும் பார்க்க