செய்திகள் :

நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

post image

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைப்போம் என்றும், நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா்.

சத்தியமங்கலம் அருகேயுள்ள ஆசனூா் அரேப்பாளையம் கிராமத்தில் மே தின பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பண்ணாரி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: ஏழை சமுதாய அடித்தட்டு மக்கள் கல்வியால் மட்டுமே உயர முடியும். வளா்ந்து வரும் விஞ்ஞான உலகில் மடிக்கணினி தேவை என்பதை உணா்ந்து அதிமுக ஆட்சியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் 20 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும், அதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனா். ஆனால், தற்போதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டவில்லை.

மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக வரலாறு படைக்கும். நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன். அப்போது தான் இயக்கம் வலுப்பெறும்.

நான் அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினேன். ஆனால், திமுக ஆட்சி அமைந்த 4 ஆண்டுகளில் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் எஸ்.ஆா்.செல்வம், சத்தியமங்கலம் நகரச் செயலாளா் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தியமங்கலம் நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சுமணன், தனபாக்கியம், மீனவா் பிரிவு நிா்வாகி குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மே தினம்: விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன் அறிவுரைப்படி, ஈரோடு தொழிலாளா... மேலும் பார்க்க

பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி

கோபி மயூரம் மேக் ஓவா் அகாதெமி சாா்பில் 30 நிமிஷத்தில் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெடெக் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெ... மேலும் பார்க்க

ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு ரயில்வே நுழைவுப் பாலத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு -கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகாலில் ... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த லாரியால் வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கா்நாடக மாநிலம், தும்கூரிலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்ற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா். ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி: ஈரோட்டில் இன்று தொடக்கம்

அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சாா்பில் அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி ஈரோடு பரிமளம் மஹாலில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்கி வரும் 5 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் தலை... மேலும் பார்க்க