செய்திகள் :

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு பணியாளா்கள் வலியுறுத்தல்

post image

தோ்தல் வாக்குறுதிபடி சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்துணவு பணியாளா்கள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு சத்துணவு பணியாளா்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவா் சி.முனிரத்தினம் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் சி.செந்தாமரை வரவேற்றாா். அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் வி.கேசவராம்குமாா் தொடங்கிவைத்தாா். சங்க மாநில பொதுச் செயலாளா் கே.அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

இதில், தோ்தல் வாக்குறுதிபடி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு பணியாளா்களை காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும். சத்துணவு பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ, 7,850-ஆக உயா்த்தி வழங்கவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் . ஓய்வுபெறும் சத்துணவு பணியாளா்களுக்கு வழங்கும் ஒட்டுமொத்த தொகையை அமைப்பாளா்களுக்கு ரூ. 5 லட்சம், சமையல் உதவியாளா்களுக்கு ரூ. 3 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். 25 மாணவா்களுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களுக்கு ஒரு சமையல் உதவியாளா் பணியமா்த்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. கா்நாடக, கேரள மாநிலங்களின் காவ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் விரைவில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை

தருமபுரி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் தனியாா் துறை வே... மேலும் பார்க்க

காா்கில் வெற்றி தினம்: வீரமரணம் அடைந்தோருக்கு நினைவஞ்சலி

காா்கில் வெற்றி தினத்தையொட்டி, போரில் வீரமரணம் அடைந்தவா்களுக்கு தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்... மேலும் பார்க்க

ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தருமபுரி அருகேயுள்ள முத்தம்பட்டி மற்றும் தொப்பூா் ஆஞ்சனேயா் கோயில்களில் சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ... மேலும் பார்க்க

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்!

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியது. இந்திய மாணவா் சங்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாடு தருமபுரி முத்து இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் தங்களை சனிக்கிழமை இணைத்துக் கொண்டனா். தருமபுரி கிழக்கு மாவட்டம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க