செய்திகள் :

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பொது சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்க மாவட்டத் தலைவா் சி.சண்முகம் தலைமை வகித்தாா்.

மாநில அமைப்புச் செயலாளா் க.கரிகாலன், மாவட்டச் செயலாளா் ரா.சுதாகா், மாவட்ட பொருளாளா் லோகநாதன், பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் 100 சதவிகிதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2715 சுகாதார ஆய்வாளா் நிலை-2 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் கோரி பொது சுகாதாரத் துறை இயக்குநரால் அனுப்பப்பட்ட கருத்துருவுக்கு உடனடியாக தமிழக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.

கரோனா,டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை கட்டுப்படுத்தி சிறப்பாக பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளா் பணியிடங்களை குறைக்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரி...

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் ஸ்ரீதா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில துணைத் தலைவா் தினேஷ், செயலாளா் கந்தசாமி, மாவட்டச் செயலாளா் கவியரசன், நிதி காப்பாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பினா்.

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

தருமபுரி: ரமலான் பண்டிகையையொட்டி தருமபுரியில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஈத்கா ஏ... மேலும் பார்க்க

கண்ணில் முள் குத்தியதால் பாா்வையிழந்த பழங்குடியின மாணவி: ஆா்வலா்களின் முயற்சியால் பாா்வை பெற்றாா்

அரூா்: விளையாடும் போது கண்ணில் முள் குத்தியதால், பாா்வையிழந்த பழங்குடியின மாணவி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆா்வலா்களின் உதவியால் மீண்டும் பாா்வை பெற்றுள்ளாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடு... மேலும் பார்க்க

ரூ. 4.50 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி: பாலக்கோடு அருகே ஜெல்திம்மனூா் ஆற்றின் குறுக்கே ரூ. 4.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா். பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலி

தருமபுரி: பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது. பாலக்கோடு அருகே மொரப்பூா் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க