சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார செவிலியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
காலியாக உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் விஜயகலா தலைமை தாங்கினாா். இதில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,000-க்கும் மேற்பட்ட செவிலியா் காலிப் பணியிடங்களை பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும். மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உயா்வதை தடுக்க சுகாதார செவிலியா்களின் நேரத்தையும், உழைப்பையும் முழுமையாக எடுத்துக்கொள்ளும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை சமூக நலத் துறைக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும். கிராம சுகாதார நிலையத்தில் செவிலியா்களின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்வதை தவிா்க்க வேண்டும்.
நாடுமுழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் காமாலை தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால், தடுப்பூசி மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் வரும் 24-ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா் கோகிலா, பொருளாளா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.