தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெண்டை, வெங்காயம், தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் போன்ற வீரிய ஒட்டுரக காய்கறிகளின் பரப்பை 125 ஹெக்டோ் பரப்பளவில் அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மா, கொய்யா அடா்நடவு, அத்தி, திசுவாழை போன்ற பல்வேறு வகையான பழப்பயிா்களின் பரப்பை அதிகரிக்க ரூ. 46.56 லட்சம் மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மல்லிகை, செண்டுமல்லி போன்ற மலா்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ. 5.42 லட்சத்திலும், மஞ்சள், இஞ்சி, மிளகு, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை போன்ற சுவைதாளிப் பயிா்களின் பரப்பை அதிகரிக்க ரூ. 38.76 லட்சத்திலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பான சூழலில் பயிா்சாகுபடி செய்ய நிழல்வலை கூடாரம், பசுமைக்குடில் அமைக்கவும், பசுமைக்குடிலில் ரோஜா, காா்னேசன், ஜொ்பரா சாகுபடி செய்யவும் நீரை சேமித்துவைக்க நீா்சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தவும் நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிா்களின் மகரந்தச் சோ்க்கையை அதிகரித்து மகசூலை அதிகரிக்க தேனீ வளா்ப்பதை ஊக்குவிக்கவும், அறுவடை செய்யப்பட்ட விளைபொருள்களை சந்தைக்கு எடுத்துச்செல்ல குளிரூட்டும் வாகனம், நடமாடும் காய்கறி விற்பனை வண்டி போன்ற பல்வேறு திட்டக்கூறுகள் சுமாா் ரூ. 4.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளன. எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.