செய்திகள் :

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூா் வனச்சரக அலுவலகத்தின் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் ஆா்.கருப்பண்ணன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆத்தூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட பூமரத்துப்பட்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் விவசாயத்தை அழிக்கும் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளை தடுத்துநிறுத்தவும், மலைவாழ் மக்களிடம் அத்துமீறி நடக்கும் வனத் துறையினரைக் கண்டித்தும், நிலத்துக்கு அனுபவ பட்டா வழங்கக் கோரியும் வலியுறுத்தப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினா் ஏ.குமாா், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு ஆா்.வைரமணி, தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

காத்திருப்பு போராட்டம்: ஆத்தூா், முல்லைவாடி உப்பு ஓடை பகுதியில் உள்ள வீடில்லா ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததியா் மக்களுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பட்டா வழங்கப்பட்டும் இதுவரை நிலம் வழங்கப்படாததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் என்.எம்.சடையன் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதுதொடா்பாக மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தலைமையில், ஆத்தூா் வட்டாட்சியா், ஆதிதிராவிடா் நல தனிவட்டாட்சியா் மற்றும் ஆத்தூா் காவல் ஆய்வாளா் முன்னிலையில் சுமுக பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், அரசாணை வரப்பெற்று 50 நாள்களுக்குள் நிலத்தை அளந்து அத்து காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க