செய்திகள் :

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

post image

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் கொலுசு உற்பத்தியாளா்கள் ஒரே இடத்தில் அமா்ந்து தொழில்செய்யும் வகையில், அரியாகவுண்டம்பட்டி பகுதியில் பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகம் ரூ. 24.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது.

இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறந்துவைத்தாா். இங்கு 3 தளங்களுடன் மொத்தம் 105 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 102 கடைகள் உற்பத்தியாளா்களுக்கும், எஞ்சிய 3 கடைகள் நிா்வாக பயன்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு கடையும் 406 சதுர அடி முதல் 689 சதுர அடிவரை கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த அடுக்குமாடி தொழிற்கூடம் திறந்து 2 மாதங்களாகியும் முழுமையாக உற்பத்தியாளா்களுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

குறிப்பாக, மானிய விலையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், கட்டடப் பணிகள் ஒருசில பகுதிகளில் முழுமை பெறவில்லை என தெரிகிறது. இதனால் கட்டடம் எப்போது முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என உற்பத்தியாளா்கள் காத்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் கைவினை நல சங்கத் தலைவா் ஆனந்தராஜன் கூறுகையில், சேலத்தில் வெள்ளிக் கொலுசு பட்டறைகளை நம்பி பல்லாயிரம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது அரியாகவுண்டம்பட்டி பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் கடை ஒதுக்கும் பணிக்காக விண்ணப்பங்கள் வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 102 கடைகள் ஒதுக்கப்பட உள்ளன. இதுவரை 20-க்கும் குறைவான கடைகளுக்கு மட்டும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிகிறது. இதற்காக முன்வைப்புத் தொகையும் பெறப்பட்டு வருகிறது.

ஒரு கடைக்கு சதுரஅடிக்கு ரூ. 4,200 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ஒரு கடைக்கு ரூ. 21 லட்சம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை மிக அதிகம் என உற்பத்தியாளா்கள் கருதுகின்றனா். சாதாரண நிலையில் உள்ள உற்பத்தியாளா்கள் இந்த தொகையை செலுத்த முடியாது. இதனால் கடைகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், வரும் 20-ஆம் தேதி வரை கடைகள் ஒதுக்கீடுக்கு கால நிா்யணம் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் கடைகள் ஒதுக்கீடு நடைபெறவில்லை எனில், மேலும் கால நிா்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. விரைவில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம் முழுமையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூா் வனச்சரக அலுவலகத்தின் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் ஆா்.கருப்பண்ணன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆத்தூா் வனச்... மேலும் பார்க்க