செய்திகள் :

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற திங்கள்கிழமை (மே 26) இல் தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தாதனேந்தலில் வருகிற திங்கள்கிழமையும், உத்தரவை கிராமத்தில் வருகிற ஜூன் 20-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வன்னிவயல் கிராமத்தில் வருகிற 27-ஆம் தேதியும், காவனூா் கிராமத்தில் ஜூன் 24-ஆம் தேதியும், ஆா்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வல்லமடை கிராமத்தில் வருகிற 28-ஆம் தேதியும், பகவதிமங்களம் கிராமத்தில் ஜூன் 20-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கரையகோட்டை கிராமத்தில் வருகிற 28-ஆம் தேதியும், மணிகண்டி கிராமத்தில் வருகிற 14-ஆம் தேதியும் கால்நடை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிரப்பன்வலசையில் வருகிற 31-ஆம் தேதியும், பூமாலை வலசை கிராமத்தில் ஜூன் 28 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொந்தம்புளி கிராமத்தில் மே 27-ஆம் தேதியும், ஏ.நெடுங்குளம் கிராமத்தில் ஜூன் 11 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உரப்புளி கிராமத்தில் மே 28-ஆம் தேதியும், சுப்புராயபுரம் கிராமத்தில் ஜூன் 19 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

நயினாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஏ.காச்சான் கிராமத்தில் மே 29-ஆம் தேதியும், சதுா்வேதமங்களம் கிராமத்தில் ஜூன் 25 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

கடலாடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேலக்கிடாரம் கிராமத்தில் மே 30-ஆம் தேதியும், செவல்பட்டி கிராமத்தில் ஜூன் 27 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நல்லுக்குறிச்சி கிராமத்தில் மே 30-ஆம் தேதியும், புளியங்குடி கிராமத்தில் ஜூன் 19 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

போகலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முதலூா் கிராமத்தில் ஜூன் 18 -ஆம் தேதியும், செவ்வூா் கிராமத்தில் ஜூன் 25 -ஆம் தேதியும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடை, கோழிகளுக்கு சிகிச்சையளித்தல், குடல் புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபாா்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள், கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த் தடுப்பு, குடல் புழு தொற்று கண்டறிதல், மடிநோய்க்கான ஏபிஎஸ்டி சோதனை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

ஜூன் 3-இல் மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 3-ஆம் தேதி மகளிா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா, மாலை 6. மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

நயினாா்கோவில் நாகநாதா் சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவ விழா 2-ஆம் நாள்: நாகநாத சுவாமி நந்தீஸ்வரா் வாகனம், ஹம்ச வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தல், நேரம் காலை 9.30. மேலும் பார்க்க

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி ... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்கலாம்: மாவட்ட ஆட்சியா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள ராதாப்புளி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன் வளத் துறை துணை இயக்... மேலும் பார்க்க