செய்திகள் :

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14-ல் வெளியீடு!

post image

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tanuvas.ac.in என்ற இணையதளங்கள்மூலம் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு பிவிஎஸ்சிஏஹெச் 660 இடங்கள் உள்ளன.

திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 20 இடங்கள் உள்ளன.

இதேபோல, ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள் உள்ளன.

தவெக ஆர்ப்பாட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி

இந்த 3 பி.டெக். படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

நிகழாண்டில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கென 7.5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

The ranking list for veterinary medicine will be released on July 14th.

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குட... மேலும் பார்க்க

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கட... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கு... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை

பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பா... மேலும் பார்க்க

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க