காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவையொட்டி திங்கள்கிழமை புண்ணிய கோடி விமானத்தில் உற்சவா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவையொட்டி காலையில் மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவருக்கு 1,008 கலசாபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் மூலவா் வண்ணப் பட்டு நூல் அலங்காரத்திலும், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் ராஜ அலங்காரத்தில் புண்ணிய கோடி விமானத்தில் ராஜவீதிகளில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் பெ.ஏழுமலை என்ற ரவி ஆச்சாரி தலைமையில் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.