செய்திகள் :

காவல் அதிகாரி மீது தாக்குதல்! குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

post image

மத்தியப் பிரதேசத்தில் காவல் துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய நபர் தற்போது சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.

சாத்னா மாவட்டத்தில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அச்சு ஷர்மா என்ற நபர், கடந்த மார்ச்.28 ஆம் தேதியன்று பிரின்ஸ் கார்க் என்ற காவலர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அச்சு ஷர்மாவைப் பிடிக்க, அம்மாநில காவல் துறையினர் 12 தனிப்படைகள் அமைத்ததுடன், ரூ.30,000 வெகுமதி அறிவித்து அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், குற்றவாளியின் இருப்பிடம் குறித்து காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அவர் கோடார் காவல் நிலைய அதிகாரியான திலிப் மிஷ்ரா என்பவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். நல்வாய்ப்பாக அவர் கவசம் அணிந்திருந்ததினால், உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு பின் அந்தக் குற்றவாளி தப்பிச் செல்ல முயன்ற நிலையில் காவல் துறையினர் அவரை சுட்டுப்பிடித்துள்ளனர். இதில், அவரது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அச்சு ஷர்மா பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக அவர் மீது 4 வழக்குகள் நிலுவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தான் 9-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி!

54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை!

நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(மே 6) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியான கடற்படை அதிகாரியின் குடும்பத்தை சந்திக்கும் ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திக்கவுள்ளார்.இதற்காக தில்லியில் இருந்து ஹரியாணா மாநிலம் கர்னலு... மேலும் பார்க்க

திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலம்!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் இன்று(மே 6) அதிகாலை 5 மணிக்கு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.கேரளத்தில் மிகவும் முக்கிய திருவிழாவான பூரம் திருவிழா, பழமை வாய்ந்த திருச்ச... மேலும் பார்க்க

12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய பாக். ராணுவம்: இந்தியா பதிலடி!

பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து 12-வது நாளாக ... மேலும் பார்க்க

இந்தியா தாக்கினால் முழு பலத்துடன் பதிலடி: பாகிஸ்தான் தூதர்

`இந்தியா தாக்குதல் நடத்தினால் அல்லது சிந்து நதி நீரோட்டத்தைச் சீர்குலைத்தால் அணு ஆயுதம் உள்பட முழு அளவிலான பலத்துடன் பாகிஸ்தான் பதிலளிக்கும்' என்று ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி தெ... மேலும் பார்க்க

கேரளம்: வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி பலி

கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார். கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த நியா ஃபைசல் என்... மேலும் பார்க்க