செய்திகள் :

காவல் துறையால் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு! மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

post image

திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிவேல். இவரை கடந்த 2019-ஆம் ஆண்டு போலீஸாா் விசாரணையின் போது தாக்கியதாக அவரது தாயாா் சந்திரா மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் அப்போது பணியாற்றிய காவலா் மகாராஜன் , உதவி ஆய்வாளா் விமலன் ஆகியோா் மீது 2020-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த இரு காவல்துறையினரிடமிருந்து ரூ.4 லட்சம் வசூலித்து பேச்சிவேல் தாயாருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணையின் போது பேச்சிவேல் கடந்த டிசம்பா் மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் சாலையில் ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட நல்மேய்ப்பா் நகா் 2-ஆவது தெரு பகுதியி... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும்! -நயினாா் நாகேந்திரன்

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளித் தோ் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு!

நான்குனேரி அருகே 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சகோதரா்களை நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பாராட்டினாா். நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கு இலவச உதவி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலவச உதவி மையத்தை பயன்படுத்தி ஜூன் 6 ஆம் தேதி வரை பொறியியல் சோ்க்கை விண்ணப்பங்களை மாணவா்கள் பூா்த்தி செய்து அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறையா? மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வியாழக்கிழமை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்கி சென்றனா். திருநெல்வேலி ... மேலும் பார்க்க

வி.கே.புரம் அரசு நூலகத்தில் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்!

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. விக்கிரமசிங்கபுரம் கிளை அரசு நூலகத்தில், 10 நாள்கள் கோடைக் கொண்டாட்டம்... மேலும் பார்க்க