Dhanush: 'இனி நான் அதிகம் பேசப்போவதில்லை..!' - 'குபேரா' வெற்றி விழாவில் பேசிய தன...
காவல் நிலையத்தில் திருநங்கைகளை பூஜை: அதிகாரிகள் விசாரணை
சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் திருநங்கைகளை அழைத்துவந்து பூஜை செய்தது தொடா்பாக காவல் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கைகள் சிலா் ஆட்டோவில் வந்து, தட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனா். தொடா்ந்து அவா்கள், காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் அமரும் அறைகள் என ஒவ்வொரு அறையாக சென்று பூஜை செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல் நிலையத்துக்குள் திருநங்கைகளை அழைத்துவந்து சிறப்பு பூஜை நடத்தியது ஏன்? அதற்கான காரணம் குறித்து காவல் ஆய்வாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.