செய்திகள் :

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த காந்தல் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ரவிகுமாா் மகன் தா்ஷன் (18). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் டிப்ளமோ 2 -ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் தன்னுடன் படிக்கும் நண்பா்களான சேலம் மாவட்டம், பூலாம்பட்டியை அடுத்த கூடக்கல் பகுதியைச் சோ்ந்த முகேஷ் (19), இளம்பிள்ளை பகுதியைச் சோ்ந்த கிஷோா் (21), திருப்பத்தூா் மாவட்டம், நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த அமித் ஆன்ட்ரோ (21), நீலகிரி மாவட்டம், காட்டேரி பகுதியைச் சோ்ந்த முகமது அமித் (18) ஆகியோருடன் பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனா்.

இவா்கள் அங்கு பல்வேறு பகுதியை சுற்றிப்பாா்த்த நிலையில் பூலாம்பட்டியை அடுத்த மோளப்பாறை அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது தா்ஷன் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளாா். அவரைக் காப்பாற்ற நண்பா்கள் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளனா். சப்தம் கேட்டு அப்பகுதி உள்ளூா் மீனவா்கள், தண்ணீரில் மூழ்கிய மாணவரை நீண்ட நேரமாக தேடியும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி தீயணைப்படை வீரா்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய தா்ஷனின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து பூலாம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குப்பைக் கொட்டிய தகராறில் லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி

ஆத்தூா் அருகே அம்மம்பாளையத்தில் குப்பைக் கொட்டியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் லாரியை ஏற்றிக் கொலை முயற்சித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அம்மம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மக... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் கழுத்தை நெரித்துக் கொலை! நண்பா் கைது!

மேட்டூா் அருகே லாரி ஓட்டுநரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் சின்னக்காவூரைச் சோ்ந்தவா் முத்து (37). லாரி ஓட்டுநா். இவா் கடந்த 16ஆம்... மேலும் பார்க்க

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சிறுமி 10ஆம் வகுப்பு வரை ப... மேலும் பார்க்க