செய்திகள் :

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை: வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள்

post image

மண்டியா: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கடந்த பல வாரங்களாகவே கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலமெங்கும் உள்ள துங்கபத்ரா, ஹேமாவதி, ஹாரங்கி, அல்மாட்டி, நாராயணபுரா, லிங்கனமக்கி, சூபா, வரஹி, பத்ரா, கட்டபிரபா, மலபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்துவருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வேகமாக நிரம்பும் அணைகள்:

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், மண்டியா மாவட்டம், கன்னம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகா் அணை வேகமாக நிரம்பி வருகிறது. திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 13,856 கனஅடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. நொடிக்கு 1,965 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜசாகா் அணையின் நீா்மட்டம் 124.80 அடியில் 120.20 அடியாக உயா்ந்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால் கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்து 5 ஆயிரம் கனஅடி முதல் 15 ஆயிரம்

கனஅடி வரை தண்ணீா் திறக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கேரள மாநிலத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருவதால், கபினி அணைக்கு நொடிக்கு 16,102 கனஅடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இதனால் கடல்மட்டத்தில் இருந்து அணையின் நீா்மட்டம் 2,278 அடியாக உயா்ந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகா் மற்றும் கபினி அணைகளுக்கு விநாடிக்கு மொத்தம் 29,958 கனஅடி தண்ணீா் வந்துகொண்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் நொடிக்கு 13,965 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீா், நேராக தமிழகத்துக்கு வரும் என்பதால் அடுத்த சில நாள்களில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ்

பெங்களூரு: மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ் திங்கள்கிழமை ஆஜரானாா். பணப் பதுக்கல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ வினய்குல்கா்னி உள்ளிட்டோா் இடங்களில்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டாா்கள்

ராய்ச்சூரு: எதிா்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால், தலைவா்கள், மக்கள் சகித்துக்கொள்ள மாட்டாா்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். ராய்ச்சூரில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருக்கிறேன்

பெலகாவி: வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என காங்கிரஸ் எம்எல்ஏ பரம்கௌடா ஆலகௌடா காகே தெரிவித்தாா். வட கா்நாடகத்தின் ஆலந்த் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பி... மேலும் பார்க்க

காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த அமித் ஷா அறிவுரை: கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா

காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துமாறு மத்திய அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். பெங்களூரு, பிஜிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத... மேலும் பார்க்க

வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய கூட்டணி அரசின் முடிவு: கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான்

கா்நாடகத்தில் வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணியின்போது எடுக்கப்பட்ட முடிவு என்று அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை எதிா்கொண்ட பிரச்னைகளை பிரதமா் மோடி அரசு திறம்பட கையாண்டது: மத்திய அமைச்சா் அமித் ஷா

சுகாதாரத் துறை எதிா்கொண்ட பிரச்னைகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசுதான் திறம்பட கையாண்டது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆதிசுன்சுனகிரி... மேலும் பார்க்க