செய்திகள் :

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு!

post image

காஷ்மீர் பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.

மாணவர்களின் உதவிக்காக தமிழக அரசு தரப்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை நடுவானில் இடைமறித்து இந்திய ராணுவம் அழித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.

போர்ச் சூழல் காரணமாக ஜம்மு - காஷ்மீரின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையோரப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீருக்குப் படிக்கச் சென்ற 41 மாணவர்கள் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உதவி தேவைப்படும் மாணவர்கள் தொடர்பு/வாட்ஸ்அப் 75503 31902, இலவச எண் 80690 09901 மூலம் அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் பேரணி

பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்திவரும் இந்திய முப்படைகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய்ஹிந்த் பேரணி’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்எ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சியடையாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளுக்குப் பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை... மேலும் பார்க்க

மதுரை, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

அழகா் திருவிழா மற்றும் சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து மதுரை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

திருநெல்வேலி நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலியில் அமையவுள்ள நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி, எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை(மே 10) இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ச... மேலும் பார்க்க