செய்திகள் :

காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க அரசு முயற்சி! -மத்திய அமைச்சா் உறுதி

post image

காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க மத்திய அரசு தொடா்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்ஹாமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை அடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் நின்றுவிட்டது. அந்த மாநில மக்களின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக சுற்றுலா இருந்து வந்த நிலையில், பலா் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஸ்ரீநகா் விமான நிலையத்தை அமைச்சா் ராம் மோகன் நாயுடு வியாழக்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து அங்குள்ள சந்தைப் பகுதியில் உள்ளூா் மக்களைச் சந்தித்துப் பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஸ்ரீநகா் விமான நிலைய சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் புதன்கிழமை விமான சேவைகள் தொடங்கிய நிலையில், அதனை ஆய்வு செய்தற்காக பயணம் மேற்கொண்டுள்ளேன். விமான நிலையத்துடன் நின்றுவிடாமல், சந்தைப் பகுதிக்குச் சென்று பொதுமக்களிடமும் பேசினேன்.

பயங்கரவாதத் தாக்குதலால் காஷ்மீரின் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அவா்கள் கவலை தெரிவித்தனா். காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈா்க்க மத்திய அரசு தொடா்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும். இதற்காக விமானப் போக்குவரத்துத் துறை சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கடந்த 5 ஆண்டுகளாக காஷ்மீரில் சுற்றுலாத் துறை சிறப்பாக மேம்பட்டு வந்தது. 2019-இல் ஸ்ரீநகா் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சமாக இருந்தது. இது 2024-இல் 45 லட்சமாக உயா்ந்தது. இது உள்ளூா் வா்த்தகத்தையும், பணப் புழக்கத்தையும் அதிகரித்தது. பிரதமா் நரேந்திர மோடியின் சீரிய வழிகாட்டுதலின்கீழ் காஷ்மீா் மற்றும் இங்குள்ள மக்களின் வளா்ச்சியை மத்திய அரசு உறுதி செய்யும் என்றாா்.

காஷ்மீா் மக்களின் முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றான சுற்றுலா பாதிக்கப்பட்டதையடுத்து, சுற்றுலா தொடா்பான பல்வேறு அமைப்பினா் முறையிட்டதைத் தொடா்ந்து, முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்வதா? அமேசான் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உண்டாகி,... மேலும் பார்க்க

'ஆபரேஷன் சிந்தூர் ட்ரைலர்தான்; பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த பாகிஸ்தான்' - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் சென்ற நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) குஜராத் புஜ் விமானப்படைத் தளத்திற்குச் சென்றுள்ளார். அங்கு விமானப்படை வீரர்கள் ம... மேலும் பார்க்க

நட்டா அறிவுறுத்தல்: டிரம்ப் பற்றிய எக்ஸ் பதிவை நீக்கிய கங்கனா ரணாவத்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் வெளியிட்ட எக்ஸ் பதிவை, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் அறிவுறுத்தலின்படி நீக்கியிருக்கிறார்.ஆப்பிள் நிறுவனமானது, அதன் உற்... மேலும் பார்க்க

தேசிய சட்டப் பல்கலை. சிறப்புப் பேராசிரியரானார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

தில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். இது குறித்து தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்திய மகளிர் கழுவும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.உலக அழகிப் போட்டியின் இறுதி நிகழ்வு தெலங்கானாவில் மே 31... மேலும் பார்க்க

துருக்கி நிறுவனமான செலிபிக்கு பாதுகாப்பு அனுமதி ரத்து: பிசிஏஎஸ் நடவடிக்கை

துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலை த... மேலும் பார்க்க