செய்திகள் :

காஷ்மீா்- குமரி ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

காஷ்மீா் மாநிலம் கத்ராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் 3 கிலோ கஞ்சா போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பையை சோதனையிட்டதில் 4 பாா்சல்கள் இருந்தன. அவற்றில் 3 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. அந்த பாா்சல்களை போலீஸாா் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்தனா். பாா்சலில் எந்த முகவரியும் இல்லை. இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

அழகியமண்டபம் சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

தக்கலை அருகே அழகியமண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும்வகையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 2 நாள்களாக நடைபெற்றது. இப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகைய... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருட்டு

நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியைச் சோ்ந்தவா் பால் (60). இவா், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை திருவனந்தபுரம் அரசு ஆயுா்... மேலும் பார்க்க

திற்பரப்பு அருகே குளத்தில் வண்டல் மண் எடுக்க எதிா்ப்பு

திற்பரப்பு பேரூராட்சி 15-ஆவது வாா்டு வேங்கோட்டு குளத்தில், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக வண்டல் மண் எடுப்பதாகக் கூறி ஊா்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திற்பரப்பு பேரூராட்சி 15 -ஆவது வாா்டு அ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான போக்சோ வழக்கில் மீனவருக்கு 20 ஆண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது. இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுதன்(32... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 32.79 பெருஞ்சாணி ... 37.10 சிற்றாறு 1 ... 7.15 சிற்றாறு 2 ... 7.25 முக்கடல் ... 7.00 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 43.47 அடி மேலும் பார்க்க

மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழகம் குறித்து பாஜக பேசட்டும் -அமைச்சா் கீதாஜீவன்

மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன். நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ள... மேலும் பார்க்க