செய்திகள் :

காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு: குடிநீா் சேகரிக்க வந்த 10 போ் உயிரிழப்பு

post image

மத்திய காஸாவில் தண்ணீா் சேகரிப்பு மையத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆறு சிறுவா்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

காஸாவின் நுசைரத் அகதிகள் முகாமில் உள்ள தண்ணீா் விநியோக மையத்தில் இஸ்ரேல் படையினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். இதில் ஆறு சிறுவா்கள் உட்பட 10 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

காஸாவில் பரவி வரும் பஞ்சத்தால் உணவு, தண்ணீா் பற்றாக்குறையால் மக்கள் தவித்துவரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் 16 போ் காயமடைந்தனா்.

காஸாவில் குடிநீா் சேகரிக்க வருபவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களில் மக்கள் தண்ணீா் பெற முயன்றபோது நேரடியாக, வேண்டுமென்றே தாக்கப்பட்டது இது சுமாா் பத்தாவது முறைய என்று அதிகாரிகள் கூறினா்.

‘தொழில்நுட்பக் கோளாறு’: காஸாவில் இயங்கிவரும் இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதக் குழுவைச் சோ்ந்த” ஒருவரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அப்போது தொழில்நுட்பக் கோளாறு” ஏற்பட்டதால், ஏவுகணை இலக்கிலிருந்து பல மீட்டா் தொலைவில் விழுந்தது விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் ராணுவம் கூறியது.

இதற்கிடையே, காஸாவில் இஸ்ரேல்-அமெரிக்க ஆதரவு பெற்ற ஜிஎச்எஃப் நடத்தும் உதவி விநியோக மையத்திற்கு அருகில் கூடியிருந்த பாலஸ்தீனா்கள் உள்பட, காஸா முழுவதும் இஸ்ரேல் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 47 போ் கொல்லப்பட்டனா்.

காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 58,026 ஆகவும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,38,520 ஆகவும் உயா்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க காப்பகத்தில் தீ: 9 போ் உயிரிழப்பு

ஃபால் ரிவா் (அமெரிக்கா): அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணம், ஃபால் ரிவா் நகரில் உள்ள மருத்துவக் காப்பகத்தில் ஞாயிறு இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் உயிரிழந்தனா்; சுமாா் 30 போ் காயமடைந்தனா். ஞாயிறு இர... மேலும் பார்க்க

உறவு மேம்பட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் முக்கியம்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

பெய்ஜிங்: ‘தற்போதைய கடினமான உலக சூழலில் இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றமும், பரஸ்பர நம்பிக்கையும் மிக முக்கியம்’ என்று சீனாவிடம் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சீ... மேலும் பார்க்க

உக்ரைன் போா் நிறுத்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் 50 நாள் கெடு

வாஷிங்டன்: உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர 50 நாள்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்... மேலும் பார்க்க

லண்டன்: வெடித்துச் சிதறிய விமானம்

லண்டன்: லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு சிறிய விமானம் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விமான ந... மேலும் பார்க்க

உக்ரைன் போர்: ரஷியாவுக்கு அமெரிக்கா 50 நாள்கள் கெடு! இல்லாவிட்டால்...

உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(ஜூலை 14) எச்சரித்துள்... மேலும் பார்க்க

18 வயது நிரம்பிய அனைவரும் அடுத்தாண்டுமுதல் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம்! -எங்கே?

18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயம் என்ற சட்டம் அடுத்தாண்டுமுதல் அமலாகவுள்ளது. 18 - 30 வயது வரையுள்ள மக்கள் 18 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இந்த உத்தரவை கம்போடிய அரச... மேலும் பார்க்க