செய்திகள் :

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

post image

காஸாவில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவில் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) இரவு தொடங்கி சனிக்கிழமை(ஜூன் 28) வரையிலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் நீடித்தது.

காஸா நகரிலுள்ள பாலஸ்தீனிய திடல் அருகே அமைந்துள்ள நிவாரண முகாம்களில் நிகழ்ந்த தாக்குதல்களில், அங்கு உயிர் பிழைப்பதற்காக இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்களில் 12 பேரும், குடியிருப்பு வளாகத்திலிருந்த 8 பேரும், அப்பகுதியிலிருந்த மேலும் 20-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டனர்.

காஸாவில் 21 மாதங்களாக நீடிக்கும் சண்டைக்கு தீர்வாக, அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்படிக்கையாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபடச் சொல்லியிருக்கும் சூழலில், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதற்காக, இஸ்ரேல் அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான மூலோபய விவகாரங்களுக்கான அமைச்சர் ரோன் டெர்மெர் வாஷிங்டனுக்கு அடுத்த வாரம் புறப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, அமெரிக்க அரசு உயரதிகாரிகளுடன் அவர் காஸா சண்டை நிறுத்தம், ஈரான் உள்ளிட முக்கிய விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார் என்றும் இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியாநடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா்.இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:ஒடேசா நகரில் ரஷியா ஏவ... மேலும் பார்க்க

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடா்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பம... மேலும் பார்க்க

சீனாவில் மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் குயிஸோ மாகாணத்திலுள்ள ரோங்ஜியாங் மாவட்டத்தில் வெள்ளநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டு அதிகாரிகள் அங்கு மீண்டும் உயர்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரோங்ஜியாங்கிலு... மேலும் பார்க்க

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது... மேலும் பார்க்க

ரஷியாவில் பிரிவினைவாதம்..! மேற்கத்திய நாடுகள் மீது அதிபர் புதின் குற்றச்சாட்டு!

ரஷியா நாட்டுக்குள், மேற்கத்திய நாடுகள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக, அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷியா அதிபர் விளாதிமீர் புதின், பெலாரஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப் படைத் தாக்குதல்! 16 வீரர்கள் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டிற்குள் செயல்படும் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்குவாவின், வ... மேலும் பார்க்க