செய்திகள் :

காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு

post image

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 33 போ் உயிரிழந்தனா். அவா்களில் 12 போ் குழந்தைகள். இத்துடன், 2023-இல் போா் தொடங்கியதிலிருந்து இதுவரை பட்டினியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது. இதில் 80 குழந்தைகள் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா சிட்டியில் உள்ள ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் முகமது அபு சல்மியா கூறுகையில், ‘காஸாவில் 9 லட்சம் குழந்தைகள் பசியால் வாடுகின்றனா். இதில் 70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்டோா் உணவுப் பற்றாக்குறையால் மிகுந்த ஆபத்தில் உள்ளனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்’ என்று அச்சம் தெரிவித்தாா்.

ஐ.நா.வின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “மே 27 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜி.எச்.எஃப்) உணவு விநியோக முறை தொடங்கியதிலிருந்து, உணவுப் பொருள் வாங்குவதற்காக வந்த 1,000-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுகொல்லப்பட்டுள்ளனா்.

காஸாவில் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் தவித்துவரும் சூழலில், இஸ்ரேல் படையினா் நடத்தும் இத்தகைய தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

செவ்வாய்க்கிழமை மட்டும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 63 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். இதில் 26 போ் உணவுப் பொருள் வாங்குவதற்காக விநியோக மையங்களுக்கு வந்தவா்கள்.

இத்துடன், 2023 அக்டோபா் 7 முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 59,106 போ் உயிரிழந்துள்ளனா்; 1,42,511 போ் காயமடைந்துள்ளனா்.

இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!

இராக் நாட்டின், வாசிட் மாகாணத்தில் இருந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக, அம்மாகாண ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாக திறக்கப்பட்ட வண... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டைப் புரட்டியெடுத்த கனமழையால் மற்றும் வெள்ளத்தால் பலியானோரது எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: இசைக் கச்சேரியால் வலிப்பு? 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்கா நாட்டில், ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்கேற்ற 8 குழந்தைகள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹார்வர்டு பல்... மேலும் பார்க்க

வட அயர்லாந்தில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி.. 2 பேர் படுகாயம்!

பிரிட்டனின் வடக்கு அயர்லாந்தில், நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு அயர்லாந்தின், மெகுவயர்ஸ்பிரிட்ஜ் எனும் கிராமத்தில், இன்று (ஜூலை 23) காலை 8 ... மேலும் பார்க்க

காஸா தேவாலயம் தற்செயலாகத் தாக்கப்பட்டது: இஸ்ரேல்!

காஸா நகரத்திலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தற்செயலாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காஸாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த, ‘ஹோலி ஃபேமிலி’ எனும் தேவாலயத... மேலும் பார்க்க

துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

துருக்கி நாட்டில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையில், 3-ம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த 2022-ம்... மேலும் பார்க்க