செய்திகள் :

‘காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்’

post image

தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

காஸாவில் ராணுவம் தரைவழியாகத் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது. அங்கு மேலும் சில பகுதிகளைக் கைப்பற்ற ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

எந்த அளவுக்கு பிணைக் கைதிகளை விடுவிக்காமல் ஹமாஸ் அமைப்பினா் இழுத்தடிக்கடிக்கிறாா்களோ, அந்த அளவுக்கு காஸா பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றும். பின்னா் அந்தப் பகுதிகள் இஸ்ரேலுடன் இணைக்கப்படும் என்றாா் அவா்.

இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காஸாவில் அந்த நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவந்தது.

இந்த நிலையில், அமெரிக்கா, எகிப்து, கத்தாா் முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இழுபறி நீடித்தது.

அதையடுத்து, காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை முதல் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. போா் நிறுத்த முறிவுக்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் சுமாா் 600 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 1 லட்சம் போ் காயமடைந்துள்ளனா்.

அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் மக்களை ஒரே மாதத்தில் நாடு கடத்த திட்டம்?

வாஷிங்டன் : வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமை திரும்பப் பெறப்படுவதாக அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம... மேலும் பார்க்க

ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!

ரோம் : போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளை(மார்ச் 23) மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.கடைசியாக, கடந்த மாதம் 14-ஆம் தேதி போப் பிரான்சிஸ் பொதுவெளிய... மேலும் பார்க்க

நெட்ஃபிளிக்ஸ் தொடருக்காக 44 மில்லியன் டாலர் மோசடி!

நெட்ஃபிளிக்ஸ் தொடர் இயக்குவதாகக் கூறி, 44 மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டார்.ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரி... மேலும் பார்க்க

டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்!

கனடாவை இறையாண்மை கொண்ட நாடாக மதிக்கும்வரையில் பேச்சுவார்த்தை இல்லை என்றார் கனடா பிரதமர் மார்க் கார்னி. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட கனடா வணிகர்களை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி சந்தித்த... மேலும் பார்க்க

சூடான் அதிபா் மாளிகையை மீட்டது ராணுவம்

சூடான் தலைநகா் காா்ட்டூமில் உள்ள அதிபா் மாளிகையை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃபிடமிருந்து மீட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. துணை ராணுவத்துடன் சுமாா் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களின் கை- கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. கடந்த ஜனவரி... மேலும் பார்க்க