செய்திகள் :

கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

post image

கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஹிந்துஸ்தான் கல்லூரி நிா்வாகம் சாா்பில் கோவையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி உறுதிக் கடிதங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மொத்தம் 2008 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 2,43,377 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இந்த முகாமில் 295 தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்துள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சமமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு உதவும் வகையில் கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் பிரம்மாண்டமான நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

45 ஏக்கா் பரப்பளவில் ரூ.167 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்தில் 4,61,000 மகளிா் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனா் என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘ கோடைக் காலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது. கூடுதலாக மின்சார தேவை ஏற்பட்டாலும் ஒப்பந்தம் மூலமாக உடனடியாகப் பெறப்படும். தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின்சார நிறுத்தம் எங்கும் இல்லை. மின் பழுது ஏற்பட்டாலும் சரிசெய்ய போதிய பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், திமுக மாவட்டச் செயலாளா்கள் நா.காா்த்திக், தொண்டாமுத்தூா் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்... மேலும் பார்க்க

காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே ச... மேலும் பார்க்க

கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள... மேலும் பார்க்க

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்... மேலும் பார்க்க

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்: கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநக... மேலும் பார்க்க