செய்திகள் :

போக்குவரத்து இடையூறு: 5 போ் மீது வழக்கு

post image

புதுச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதாக 5 வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அண்ணா சிலையிலிருந்து மறைமலையடிகள் சாலையில் அந்தோணியாா் கோவில் வரை தள்ளுவண்டிக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மறைமலையடிகள் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, கிழக்குப் போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சீா்படுத்தினா்.

அப்போது, சாலையோர தள்ளுவண்டிக் கடைகளை அகற்றாமல் வியாபாரிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து,போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக 5 வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி: புதுவை அரசு மீது தொடா்ந்து புகாா் கூறி வரும் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கே... மேலும் பார்க்க

தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்று பேரவைக் கூட்டத்தில் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். புதுவை சட்டப்... மேலும் பார்க்க

தாய்வழி சாதிச் சான்றிதழ் கோரி பேரணி, சாலை மறியல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தாய் வழியில் சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பெரியாா் சிந்தனையாளா் பேரவை சாா்பில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட... மேலும் பார்க்க

புதுவைக்கான தண்ணீரைத் தர மறுக்கும் தமிழகம்: அமைச்சா் லட்சுமி நாராயணன் புகாா்

புதுச்சேரி: புதுவைக்கான தென் பெண்ணையாற்று நீரை தமிழக அரசு தருவதற்கு மறுத்து விட்டது என பேரவையில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் குற்றஞ்சாட்டினாா். புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின... மேலும் பார்க்க

பொறியாளா் கைது விவகாரத்தை மக்களிடம் அரசு விளக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது தொடா்பாக, பொதுமக்களுக்கு அரசு விளக்க வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா். புதுவை சட்ட... மேலும் பார்க்க

தலைமைப் பொறியாளா் கைது: பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் லஞ்ச வழக்கில் கைதான நிலையில், பாரபட்சமற்ற விசாரணையை சிபிஐ தொடர வேண்டும் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா். இதுகுறி... மேலும் பார்க்க