செய்திகள் :

காஸா போர் நிறுத்தம்: மத்தியஸ்தர்களுக்கு ஹமாஸ் படையின் பதில்!

post image

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் வரைவு திட்டத்துக்கு, மத்தியஸ்தர்களுக்கு நேர்மறையான பதிலை (பாசிடிவ் ரெஸ்பான்ஸ்) வழங்கியுள்ளதாக ஹமாஸ் கிளர்ச்சிப்படையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுடனான காஸா போரை 60 நாள்களுக்கு நிறுத்தவது தொடர்பாக, முன்மொழியப்பட்ட வரைவுத் திட்டம் குறித்து பாலஸ்தீன அமைப்புகளுடன் ஹமாஸ் கிளர்ச்சிப்படை ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தப் போர் நிறுத்த வரைவுத் திட்டம் குறித்து மத்தியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தங்களது பதிலைப் பற்றி ஹமாஸ் கிளர்ச்சிப்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“ காஸாவிலுள்ள நம் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பாக மத்தியஸ்தர்கள் வழங்கிய வரைவுத் திட்டம் குறித்து பாலஸ்தீன அமைப்புகள் மற்றும் படைகளுடன் மேற்கொண்ட ஆலோசனைகளை ஹமாஸ் நிறைவு செய்துள்ளது. இதன்மூலம், மத்தியஸ்தர்களுக்கு இந்த அமைப்பு நேர்மறையான பதிலை வழங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்கள் மத்தியஸ்தர்களுக்கு வழங்கிய பதில் மற்றும் நிபந்தனைகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இதன்படி, மத்தியஸ்தர்கள் வழங்கியுள்ள வரைவு திட்டங்களை அமல்படுத்தி போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட பாலஸ்தீன அமைப்புகள் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே முன்மொழியப்பட்ட வரைவுத் திட்டங்களில் ஹமாஸ் சிறிய மாற்றங்களை மட்டுமே மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், காஸாவினுள் போதுமான அளவு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும் எனவும்; மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தடையின்றி இயங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்துடன், காஸாவினுள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஐக்கிய நாடுகளின் சபை, ரெட் கிரெஸெண்ட் உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமே நிவாரணப் பொருள்களைக் கொண்டு வரவேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Hamas has issued a statement saying it has given a positive response to mediators on a draft Gaza ceasefire agreement.

இதையும் படிக்க:நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா

துருக்கி, சிரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்..போராடும் தீயணைப்பு வீரர்கள்!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் காட்டுத் தீ பரவி வருவதால், இருநாட்டு தீயணைப்புப் படையினரும் தங்களது எல்லைகளில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். துருக்கி நாட்டில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் பல்வேற... மேலும் பார்க்க

இஸ்ரேல் - காஸா போர்நிறுத்தம்? ஹமாஸின் அறிவிப்பால் மத்தியஸ்தர்கள் மகிழ்ச்சி!

காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுக்கு சாதகமான பதிலை அளித்திருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. முன்மொழிவில் ச... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 3 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில், 3 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், லக்கி மர்வாத் மாவட்டத்தில... மேலும் பார்க்க

ரஷியா தோற்றால், அடுத்தது நாம்தான்! அமெரிக்காவால் சீனா அச்சம்?

ரஷியா - உக்ரைன் போர் முடிவடைந்தால், அமெரிக்காவின் கவனம் சீனாவின் பக்கம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் கூறியுள்ளார்.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - அஜர்பைஜான் இடையில் ரூ.17,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் இடையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு துறைகளில் முதலீடு ச... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை

இஸ்ரேலுடனான காஸா போா் நிறுத்தம் தொடா்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவத... மேலும் பார்க்க