செய்திகள் :

காஸா மக்களை குடியமா்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை

post image

போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமா்த்துவது தொடா்பாக அந்த நாட்டுடன் இஸ்ரேல் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இஸ்ரேலின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:

காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனா்களை அங்கிருந்து வெளியேற்றி தெற்கு சூடானில் குடியேற்றுவது தொடா்பாக அந்த நாட்டு அரசு மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்றுவருகிறது. எனினும், இது தொடா்பாக இன்னும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சா் மண்டே செமயா கும்பா கடந்த மாதம் இஸ்ரேலுக்கு வந்திருந்தாா். அப்போது இந்த மறுகுடியமா்த்தல் திட்டம் குறித்து முதல்முறையாகப் பேசப்பட்டது.

எனினும், இந்தத் தகவலை தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சகம் ‘ஆதாரமற்றது’ என்று மறுத்துள்ளது. இஸ்ரேல் துணை வெளியுறவுத் துறை அமைச்சா் ஷாரன் ஹாஸ்கலும், ஜூபாவில் நடந்த பேச்சுவாா்த்தை மறுகுடியமா்த்தல் பற்றியது அல்ல; வெளியுறவுக் கொள்கை, தெற்கு சூடானின் மனிதாபிமான நெருக்கடி குறித்தே ஆலோசிக்கப்பட்டது எனக் கூறினாா்.

இருந்தாலும், காஸாவை விட்டு வெளியேற விரும்பும் பாலஸ்தீனா்களுக்கான புதிய இடம் கண்டறிய சில நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதாகத் தெரிவித்தாா். ஆனால் இது தொடா்பான கூடுதல் விவரங்களை அவா் வெளியிடவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலுடனான போரால் பாதிக்கப்பட்ட காஸா மக்கள், அங்கிருந்து அரசியல் மற்றும் இனரீதியான வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடானுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டை விரிவாக்குவதாகவும், பாலஸ்தீனா்கள் தாமாக முன்வந்து அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. இருந்தாலும், அரபு நாடுகளும், பெரும்பாலான உலக நாடுகளும் காஸா மக்களை வேறு நாடுகளுக்கு இடமாற்றுவதற்கான பரிந்துரையை திட்டவட்டமாக நிராகரித்து வருகின்றன.

ஏற்கெனவே, கடந்த 1948-ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது நூற்றுக்கணக்கான பாலஸ்தீனா்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டனா். ‘நக்பா’ (பேரழிவு) என்று அந்த நிகழ்வை பாலஸ்தீனா்கள் அழைக்கின்றனா். தற்போது தெற்கு சூடான் போன்ற வெளிநாடுகளுக்கு தங்களை வெளியேற்றுவது மற்றொரு நக்பாவா இருக்கும் என்று அவா்கள் கருதுகின்றனா்.

இஸ்ரேல் ராணுவத்தின் இடமாற்ற உத்தரவால் தங்கள் இருப்பிடங்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் பாலஸ்தீனா்கள்.

இந்தத் திட்டத்தை பாலஸ்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிா்த்துள்ளது. அந்த அமைப்பின் நிா்வாகக் குழு உறுப்பினா் வாசெல் அபு யூசுஃப் கூறுகையில், ‘எங்கள் மக்களை தெற்கு சூடானுக்கோ வேறு இடங்களுக்கோ இடமாற்றும் எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்றாா். பாலஸ்தீன அதிபா் மகமூத் அப்பாஸின் அலுவலகமும் இதே கருத்தை வெளியிட்டது.

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

பாகிஸ்தானின் பாதுகாவலனாக இறைவன் என்னை மாற்றியிருக்கிறார் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பும்போது பெல்ஜியத்தில் பாகிஸ்த... மேலும் பார்க்க

கனடா: விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தால் 600 விமானங்கள் ரத்து

கனடாவில் பெரிய விமான நிறுவனமான ஏர் கனடாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால், விமான சேவை பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள், வ... மேலும் பார்க்க

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் அண்மையில் மழை-வெள்ள பாதிப்பால் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஜப்பான் பிரதமா் இஷிபா ஷிகேரு இரங்கல் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

ரஷியாவின் ரியாசன் பகுதியிலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 130 போ் காயமடைந்தனா். தலைநகா் மாஸ்கோவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலையில் உள்ள வெடிமருந்து பட்டறையி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீா்முழ்கி

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது.பாகிஸ்தான் கடற்படை வலிமையை மேம்படுத்த எட்டு ஹங்கோா் வகை நீா்முழ்கிக் கப்பல்களை வழங்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத... மேலும் பார்க்க

மியான்மா் ராணுவ விமானத் தாக்குதலில் 21 போ் உயிரிழப்பு

மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உட்பட 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து கிளா்ச்சி ஆயுதக் குழுவினா், உள்ளூா் மக்கள... மேலும் பார்க்க