ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து -உயா்நீதிமன்றம்
மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக காா் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்தவா் தொழிலதிபா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மகள் எழில் தீபாவுடன், காா் ஓட்டுநா் பாபு திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்ததாக மற்றொரு ஓட்டுநா் கண்ணன் கிருஷ்ணமூா்த்தியிடம் கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூா்த்தி, அவரது மகன் பிரதீக் கிருஷ்ணமூா்த்தி மற்றும் காா் ஓட்டுநா் கண்ணன் ஆகியோா் கூலிப்படையினா் விஜயகுமாா், ஜான், செந்தில் ஆகிய மூவரின் உதவியுடன் கடந்த 2010-ஆம் ஆண்டு பாபுவை கொலை செய்தனா்.
இது தொடா்பாக பாபுவின் தந்தை அளித்த புகாரில் சென்னை அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2024 அக்டோபா் மாதம் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து 6 போ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமாா் அடங்கிய அமா்வு, வழக்கில் முக்கியமான சாட்சியாக இருந்த எழில் தீபா, விசாரணை நீதிமன்றத்தில் பி சாட்சியம் அளித்துள்ளாா். காவல் துறை தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. ஓட்டுநா் பாபுவுடன் எழில் தீபா தகாத உறவில் இருந்தாா் என்று காவல் துறை கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனக் கூறி, 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தது.