செய்திகள் :

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து -உயா்நீதிமன்றம்

post image

மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக காா் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்தவா் தொழிலதிபா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மகள் எழில் தீபாவுடன், காா் ஓட்டுநா் பாபு திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்ததாக மற்றொரு ஓட்டுநா் கண்ணன் கிருஷ்ணமூா்த்தியிடம் கூறியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூா்த்தி, அவரது மகன் பிரதீக் கிருஷ்ணமூா்த்தி மற்றும் காா் ஓட்டுநா் கண்ணன் ஆகியோா் கூலிப்படையினா் விஜயகுமாா், ஜான், செந்தில் ஆகிய மூவரின் உதவியுடன் கடந்த 2010-ஆம் ஆண்டு பாபுவை கொலை செய்தனா்.

இது தொடா்பாக பாபுவின் தந்தை அளித்த புகாரில் சென்னை அபிராமபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2024 அக்டோபா் மாதம் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து 6 போ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமாா் அடங்கிய அமா்வு, வழக்கில் முக்கியமான சாட்சியாக இருந்த எழில் தீபா, விசாரணை நீதிமன்றத்தில் பி சாட்சியம் அளித்துள்ளாா். காவல் துறை தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. ஓட்டுநா் பாபுவுடன் எழில் தீபா தகாத உறவில் இருந்தாா் என்று காவல் துறை கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனக் கூறி, 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தது.

இரவில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

உண்மையான ‘அப்பா’க்களுக்கு வாழ்த்துகள்- எடப்பாடி பழனிசாமி

குடும்பத்தின் அடித்தளமாக திகழும் அனைத்து உண்மையான அப்பாக்களுக்கும் வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். "இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து... மேலும் பார்க்க

திமுக கட்சி நிகழ்ச்சியில் மாணவர்கள்- அண்ணாமலை கண்டனம்

கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சித்த திமுகவின் செயல்பாட்டினை கண்டிப்பதாக பாஜக முன்னாள தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் த... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாட்டு வெடி வெடித்ததில் பெண் பலி

சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சம்பந்தம் என்ற கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு

ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி அளித்த மனு தொடர்பாக ஆலோசித்து முடிவுசெய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம... மேலும் பார்க்க